“ஆமாம்.”
“கொஞ்சம் வேகமா ஓட்டுவீங்களோ?”
ஹி...ஹி...
”கார அப்படியெல்லாம் ஒட்டக் கூடாது. பைக்க சந்து பொந்துல எல்லாம் ஓட்டுவீங்க. இத அப்படி ஓட்ட முடியாது. நீங்க அப்படி போறப்ப, கார்க்காரன் ஒங்கள திட்டியிருப்பான். நாளைக்கு நீங்க அந்த மாதிரி ஒரு பைக்காரன திட்டுவீங்க. ரோட்டுல ஒரு கல் கெடந்திச்சின்னா, பைக்குல வளைச்சிக்கிட்டு போவீங்க. இப்ப, ஒரு கல் இருந்தாலும், நீங்கதான் மெதுவா போகணும்.”
முத நாளு காத்துதான் வண்டிக்கு முக்கியம்ன்னு சொன்னாரு இல்ல. அது ஏன்னா, காத்து இல்லனா வண்டி ஓடாதான். ஓடும்போது காத்து போச்சினா, வண்டி தலைகீழா விழ கூட சான்ஸ் இருக்காம்.
அப்புறம் இன்னொண்ணு சொல்ல மறந்திட்டேன். முத நாளே போயி, லெனர் லைசன்ஸ் போட்டுடுங்க. அப்பதான், 30 நாளு கழிச்சி லைசன்ஸ் எடுக்க வசதியா இருக்கும்.
இன்னைக்கு, தலைவரு இரண்டு விஷயம் சொல்லி கொடுத்திட்டு அத பிராக்டிஸ் பண்ண சொன்னாரு.
மேடான பகுதில, வண்டிய ஆப் பண்ணிட்டு எப்படி ஸ்டார்ட் பண்ணனும்ன்னு. சமதளத்தில் ஓட்டும்போது, பிரேக்க பிடிக்க தேவையிருக்காது. ஸோ, கிளட்ச்ச மட்டும் விடுவீங்க. ஆனா, மேட்டு பகுதில, பிரேக்க பிடிச்சிட்டு இருப்பீங்க. அந்த சமயம், கிளட்ச்ச விட்டாலும் வண்டி போகாது. பிரேக்க விட்டா வண்டி பின்னாடி போகிடும். அப்ப என்ன பண்ணுறது?
கொஞ்சம் நேக்கா, கிளட்ச்ச விட்டுட்டு வண்டி லேசா உறுமுற சமயம், பிரேக்குல இருந்து கால எடுத்திட்டு, ஆக்ஸிலேட்டர லேசா மிதிங்க. ஸிங்க் வருற வரை இதுக்கு பிராக்டிஸ் தேவை.
அடுத்தது, வண்டிய எடுத்து பின்னாடி திருப்புறதுக்கு பிராக்டிஸ்.பின்னாடி திரும்பும்போது பின்கண்ணாடி வழியா பார்த்திட்டே திரும்பணும். ரிவர்ஸ் கியர்ல வண்டி கொஞ்சம் ஸ்பீடாவே போகும். அதனாலே கவனம் தேவை.
”நான் எப்ப நானே தனியா வண்டிய ஓட்டலாம்?”
“எட்டு நாளு கழிச்சு ஓட்டலாம். ம்ம்ம்ம்... நாளைல இருந்துகூட ஓட்டலாம்.”
எனக்கென்னமோ அப்படி தோணலை. திரும்பும்போது, கொஞ்சம் குழப்பமாத்தான் இருக்கு.
இன்னைக்கு காருகள பத்தி சொன்னாரு. ஒவ்வொரு கார பத்தியும் சொன்னாரு. மாருதி 800 தான் ரொம்ப சேல்ஸ் ஆன வண்டின்னு சொன்னாரு. சாண்ட்ரோல எலக்ட்ரானிக் சமாச்சாரம் அதிகம்ங்கறதால, ரிப்பேர் பார்க்க கொஞ்சம் கஷ்டம்ன்னாரு.இப்ப வர்ற கார்ல, இன்ஜின் வெயிட் கம்மி. ஆனா, பவர் அதிகம்ன்னாரு. நான் வண்டி ஓட்டுறதுல கவனமா இருந்ததால, அவ்ளோவா அவரு பேச்ச கவனிக்க முடியல. சும்மா உம் கொட்டிட்டு இருந்தேன்.
கார் ஓட்டும்போது யாராவது கூட இருந்தா நல்லதாம். தனியா போறத விட, கூட யாராவது இருக்கும்போது கொஞ்சம் அதிகம் அலெர்ட்டா இருப்போமாம். நைட் ஓட்டும்போது, யாராவது கண்டிப்பா இருக்கணுமாம். நான் கூட எப்பவாவது ஊருக்கு கார்ல போகும்போது, டிரைவர் கூட பேசிட்டே வருவேன். அப்படியே, டிஜே மாதிரி பாட்டு செலக்ட் பண்ணுறதும் நாந்தான்.
நைட் ஓட்டும்போது டயர்டா இருந்திச்சுனா, வேற யார்ட்டயாவது கொடுத்துடுங்க. அப்படி யாராச்சும் இல்லனா, ஒரு பாதுகாப்பான இடத்துல நிறுத்திட்டு, லைட்டா ஒரு தூக்கத்த போட்டுட்டு போங்க.
எல்லா காருலையும் வீல் இணைப்பு ரொம்ப காலத்துக்கு அப்படியே டைட்டா சிக்குன்னு இருக்காதாம். அடிக்கடி சர்வீஸ் அப்ப, அத கவனிக்கணும். இல்லாட்டி, உங்களுக்கு முன்னாடி அது ஒடிட்டு இருக்கும்னாரு. எனக்கு கரகாட்டகாரன் தான் ஞாபகம் வந்தது.
No comments:
Post a Comment